மிசோரமின் இந்தியா-மியான்மர் எல்லையில் மிதமான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில்,
கிழக்கு மிசோரமின் சாம்பாய் மாவட்டத்தில் 130 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாம்| நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு அச்சப்படுகிறதா?: அமைச்சர் பதில்
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் எந்தவிதமான உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
மலைப்பாங்கான வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாம், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து நிலவும் நிலநடுக்கங்களால், அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.