இந்தியா

தில்லி போராட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் கைது

DIN

தில்லியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போரட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று கைது செய்யப்பட்டார்.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில், அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 முறை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT