இந்தியா

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: விமானம் பாட்னாவில் தரையிறக்கம்

DIN


புதுதில்லி: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார். 

வியாழக்கிழமை தில்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் அவரது பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. பயணி கைது செய்யப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர்.

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறன்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT