இந்தியா

 5ஜி அலைக்கற்றை: 2-ஆவது நாளில் ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஏலம்

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.1.49 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளன.

DIN

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.1.49 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளன.
 பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 5ஜி அலைக்கற்றை ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கௌதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
 இந்த நிலையில், "இரண்டாவது நாளான புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரூ.1.49 லட்சம் கோடிக்கு அலைக்கற்றைகளை ஏலம் கோரியுள்ளன. தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை இந்நிறுவனங்கள் 1.45 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை ஏலம் எடுக்க விண்ணப்பங்களை சமர்ப்பித்தன.
 "ஏலத்தில் அனைத்து அலைவரிசைகளுக்கும் நல்ல போட்டி ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 9-ஆவது சுற்று முடிவில் இதுவரை ரூ.1,49,454 கோடி மதிப்புள்ள ஏலம் கோரப்பட்டுள்ளது. இரண்டாவது நாள் ஏலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் ஏலம் தொடரும்' என தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
 5ஜி ஏலத்தில் பங்கேற்க செலுத்த வேண்டிய முன்பண வைப்பு (இஎம்டி) தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.14,000 கோடியை செலுத்தியுள்ளது. ஒரு நிறுவனம் ஏலம் எடுக்கக் கூடிய அலைக்கற்றையின் அளவை இஎம்டி தொகையே பிரதிபலிக்கும் என்பதால் இந்த ஏலப் போட்டியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கே மிக தீவிரமாக இருக்கும் என்பதே இத்துறை நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.5.92 கோடி முதலீட்டு மோசடி: 4 போ் கைது

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

SCROLL FOR NEXT