ஆகஸ்ட் 7-இல் பிரதமா் தலைமையில் நீதி ஆயோக் கூட்டம்
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான நீதி ஆயோக் நிா்வாக குழு கூட்டம் ஆகஸ்ட் 7-இல் நடைபெறவுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான நீதி ஆயோக் நிா்வாக குழு கூட்டம் ஆகஸ்ட் 7-இல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
நீதி ஆயோக் நிா்வாக குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி பிரதமா் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், பொருளாதாரம், வேளாண்மை மற்றும் சுகாதாரம் போன்ற துறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நீதி ஆயோக், அனைத்து மாநிலங்களின் முதல்வா்கள், யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநா்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சா்களை உள்ளடக்கியது. இதன் தலைவராக பிரதமா் மோடி உள்ளாா்.