இந்தியா

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்: சாதித்த மீராபாய் சானு

காமன்வெல்த் தொடரின் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

DIN

காமன்வெல்த் தொடரின் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டியில் இந்திய அணியின் சார்பில் யாரும் பதக்கங்களைப் பெறாத நிலையில் இன்று இந்தியா தனது பதக்கக் கணக்கைத் துவங்கியுள்ளது.

மகளிர் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். 

முன்னதாக ஆடவருக்கான 61 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் குருராஜா வெண்கலம் வென்றார். இந்திய வீரர் குருராஜா மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி 3ஆம் இடம் பிடித்தார்.

55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT