இந்தியா

உத்தரகண்ட்: பாஜக தலைவராக மகேந்திர பட் நியமனம் 

DIN

பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரகண்ட் மாநிலத்தின் பாஜக தலைவராக மகேந்திர பட்டை நியமனம் செய்வதாக அறிவித்துள்ளார். 

இதற்குமுன் மதன் கௌசிக் உத்தரகண்ட்டின் பாஜக தலைவராக இருந்தார். தற்போது அவருக்கு பதிலாக மகேந்திர பட் நியமிக்கட்டுள்ளார்.  

மகேந்திர பட் பத்ரிநாத் சட்டசபையில் இருமுறை எம்.எல்.ஏவாக இருந்தவர். பாஜகவின் வலுவான நம்பிக்கையை பெற்றவராக அறியப்படுகிறார். 

மார்ச் 2022இல் நடந்த தேர்தலில் 70 இடங்களில் 47 இடங்களை கைப்பற்றி பாஜக தனது வெற்றியை நிலைநாட்டியது. காங்கிரஸ் 19 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT