உத்தரகண்ட்: பாஜக தலைவராக மகேந்திர பட் நியமனம்
பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரகண்ட் மாநிலத்தின் பாஜக தலைவராக மகேந்திர பட்டை நியமனம் செய்வதாக அறிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரகண்ட் மாநிலத்தின் பாஜக தலைவராக மகேந்திர பட்டை நியமனம் செய்வதாக அறிவித்துள்ளார்.
இதற்குமுன் மதன் கௌசிக் உத்தரகண்ட்டின் பாஜக தலைவராக இருந்தார். தற்போது அவருக்கு பதிலாக மகேந்திர பட் நியமிக்கட்டுள்ளார்.
மகேந்திர பட் பத்ரிநாத் சட்டசபையில் இருமுறை எம்.எல்.ஏவாக இருந்தவர். பாஜகவின் வலுவான நம்பிக்கையை பெற்றவராக அறியப்படுகிறார்.
மார்ச் 2022இல் நடந்த தேர்தலில் 70 இடங்களில் 47 இடங்களை கைப்பற்றி பாஜக தனது வெற்றியை நிலைநாட்டியது. காங்கிரஸ் 19 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.