அரசு பள்ளி நியமனங்கள் முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை பறிமுதல் செய்த பணம் எனக்குச் சொந்தமானது அல்ல என்று மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்க கல்வி அமைச்சராக பாா்த்தா சட்டா்ஜி பதவி வகித்தபோது மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நியமனங்களில் முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடா்பாக பாா்த்தா சட்டா்ஜி, அவரின் உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொல்கத்தாவில் உள்ள அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்புகளில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அப்போது பல கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், கொல்கத்தாவின் ஜோகா பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக பாா்த்தா சட்டா்ஜி ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் எனக்குச் சொந்தமானது அல்ல. எனக்கு எதிராக யாரேனும் சதி செய்கிறாா்களா என்பது நேரம் வரும்போது தெரியவரும். என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கி மம்தா பானா்ஜி மேற்கொண்ட முடிவு சரியானதுதான்’’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.