முகப்பு
இந்தியா

'குற்றவாளி என்றைக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறான்': நட்டா

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்கான காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு, குற்றவாளி ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொண்டதில்லை என ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
கோப்புப்படம்
பகிர்:


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்கான காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு, குற்றவாளி ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொண்டதில்லை என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பான பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது அரசியல் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் விமர்சித்தது.

இதுபற்றி பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா கூறியதாவது:

"தான் குற்றவாளி என்றோ, நேர்மையானவன் அல்ல என்றோ எவரேனும் ஒப்புக்கொண்டதை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? ஊழல் நடந்திருக்கிறது. இதுதொடர்பாக நீதிமன்றம் விசாரிக்கிறது. உங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் நீங்கள் நீதிமன்றம் சென்று அதை எதிர்கொள்ள வேண்டும். நேர்மையற்றவர்தான் ஜாமீன் கோருவார்."

முழு கட்டுரையைப் படிக்க →