கடந்த மே மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ. 1.40 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
மே மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.140,885 கோடியாகும். அதில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.73,345 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மூலம் வசூலான ரூ.37,469 கோடி உள்பட) வசூலானது. செஸ் வரியாக ரூ.10,502 கோடியும் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ரூ. 97,821 கோடி வசூலான நிலையில் இந்த ஆண்டு மே மாதத்தில் 44% அதிகமாக வசூலாகியுள்ளது.
ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தைவிட 15% வருவாய் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ. 1.68 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதித்துறை அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.