முகப்பு
இந்தியா

மும்பை உள்பட 5 மாநிலங்களில் வருமானவரித்துறை சோதனை

நாடு முழுவதும் மதுபான வியாபாரிகள் உள்பட பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சுமார் 400 இடங்களில் வருமானவரித் துறையினர் புதன்கிழமை சோதனையை தொடங்கியுள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
வருமான வரித்துறை சோதனை
பகிர்:

நாடு முழுவதும் மதுபான வியாபாரிகள் உள்பட பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சுமார் 400 இடங்களில் வருமானவரித் துறையினர் புதன்கிழமை சோதனையைத் தொடங்கியுள்ளனர். 

ஹரியாணவின் குருகிராம், மும்பை, தில்லி உள்பட 5 மாநிலங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றது. 

மும்பையில், பாந்த்ரா குர்லா வளாகத்தில் அமைந்துள்ள தூதரக குழுமத்தின் அலுவலகத்தை வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 

சோதனை நடைபெறும் வரை யாரும் அலுவலகத்தை விட்டு வெளியேறவோ, உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை
 
வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சந்தேகம் அரசு நிறுவனத்திற்கு உள்ள நிலையில், குருகிராமில், மதுபானம் விற்பனை செய்யும் தொழிலதிபரின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், பல்வேறு இடங்களில் தெகாடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றது.

முழு கட்டுரையைப் படிக்க →