இந்தியா

சத்யேந்தர் ஜெயினின் பொறுப்புகள் மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைப்பு

DIN

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்ததையடுத்து அவரது பொறுப்புகள் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் சத்யேந்தர் ஜெயின், கடந்த 2015-16 ஆண்டுகளில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் (ஷெல்) வாயிலாக ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் மேற்கொண்டதாக கூறப்படும் புகாரில் அமலாக்கத் துறை அவரை திங்கள்கிழமை கைது செய்தது.

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், அரசியல் நோக்கங்களுக்காக சத்யேந்தா் ஜெயின் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அனைத்தையும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கவனிப்பார் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. 

சுகாதாரம், மின்சாரம், பொதுப்பணி, தொழில் உள்ளிட்ட துறைகளை சத்யேந்தர் ஜெயின் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT