இந்தியா

தில்லி உயர்நீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 3 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

DIN

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 3 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

புதிய நீதிபதிகளான புருஷேந்திர குமார் கௌரவ், அனிஷ் தயாள் மற்றும் அமித் ஷர்மா ஆகியோருக்கு தில்லி உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

தில்லி உயர்நீதிமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 60-இல்,  தற்போது, நீதிபதிகளின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.. 

முன்னதாக கடந்த மே 18இல் தில்லி உயர்நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 

இதையடுத்து இன்று பதவியேற்றுக் கொண்ட, நீதிபதி கௌரவ் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் இருந்து தில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அமித் சர்மா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்குரைஞர் அனிஷ் தயாள் மற்றும் அமித் ஷர்மா ஆகியோரின் பெயர்கள் நவம்பர் 2021இல் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வுக்காக உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT