இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் ரூ.70,000 கோடி முதலீடு செய்யும் அதானி

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதானி குழுமம் ரூ,70,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சுமார் 30,000 பேருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.70,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி அம்மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அதானி ‘முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் பசுமை ஆற்றல், விவசாயப் பொருள்களுக்கான போக்குவரத்து வணிகம் உள்ளிட்டவற்றில் ரூ.11,000 கோடி அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நாங்கள் சாலை மற்றும் போக்குவரத்து கட்டுமானத்திற்கு ரூ.24,000 கோடியையும் பாதுகாப்புத் துறைகளில் ரூ.35,000 கோடியையும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தெற்காசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து வளாகத்தை அமைக்க அதானி குழுமம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கௌதம் அதானி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT