முகப்பு
இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளத்தில் அமல்படுத்தப்படாது : கேரள முதல்வர் உறுதி

குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளத்தில் அமல்படுத்தப்படாது என கேரள முதல்வர் பினரயி விஜயன் உறுதியளித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
கோப்புப் படம்
பகிர்:

குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளத்தில் அமல்படுத்தப்படாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் 2019படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தினா் இந்தியக் குடியுரிமை பெறலாம் என திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவு விழாவில் பேசிய பினராயி விஜயன் கூறியதாவது : 

நமது நாடு அரசியலமைப்பு சட்டத்தின்படி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருகிறது. சிறிது நாள்களாக மதச்சார்பின்மையை அழிக்கும் வேலை நடந்து வருகிறது. சில பிரிவினைச் சார்ந்த மக்கள் அதில் பங்கு பெறுகின்றனர். சமீபத்தில் மதத்தை வைத்து குடியுரிமையை தீர்மானிக்கிறார்கள். கேரள அரசாங்கம் இதை எப்போதும் எதிர்த்து நில்லும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.