குரங்கு அம்மை பாதிப்பு 550-ஆக அதிகரிப்பு
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 550-ஆக உயா்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 550-ஆக உயா்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே 30 நாடுகளில் இதுவரை 550-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1970-களிலேயே ஆப்பிரிக்காவில் அந்த நோய் கண்டறியப்பட்டாலும், தற்போது அந்தப் பிராந்தியத்துக்கு நேரடியாக செல்லாத ஐரோப்பியா்களுக்கும் குரங்கு அம்மை பரவி வருவது நிபுணா்களை குழப்பமடையச் செய்துள்ளது.