முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

பஞ்சாபில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர் (விடியோ)

பஞ்சாபில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சிசிடிவி விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா

பஞ்சாபில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர் (விடியோ)

பஞ்சாபில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சிசிடிவி விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாபில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சிசிடிவி விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலி வேலை செய்து வரும் தேஷ்ராஜ் (26) என்ற இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் நேற்று (ஜூன் 3)  பஞ்சாபின் மோகா மாவட்டத்தின் சந்தைப் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருப்பதாவது,  ஒரு கும்பல் தேஷ்ராஜினை கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கொண்டு விரட்டுகிறது. பின்னர், தேஷ்ராஜின் முகம் மற்றும் உடல் என பல இடங்களில் அந்த கும்பல் சரமாரியாக கத்தியால் தாக்குகின்றனர். அதன்பின் தேஷ்ராஜ் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அவர் உடலில் அசைவு இல்லாததை உறுதி செய்த அந்த மர்ம கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான தேஷ்ராஜின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அவரின் குடும்பத்தினர் தரப்பில் கூறியதாவது, “ தேஷ்ராஜிக்கும் தாக்குதல் நடத்திய இந்த கும்பலுக்கும் சில நாட்களுக்கு முன்பு சிறிய வாக்குவதம் ஏற்பட்டது. அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்துள்ளனர்” என்றனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் குறித்து காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, “ தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 2 இரு சக்கர வாகனங்களில் வந்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் 5 அல்லது 6 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பலைக் கண்ட தேஷ்ராஜ் சந்தைக்குள் ஓடியுள்ளார். அங்கு அவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்” என்றனர்.

இந்த சம்பவத்தின் போது சந்தையில் நின்று கொண்டிருந்த மக்கள் ஒருவர் கூட தாக்குதலுக்கு ஆளான தேஷ்ராஜினை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →