இந்தியா

சத்தீஸ்கரில் பானிபூரி சாப்பிட்ட 9 வயது சிறுமி பலி: 18 பேர் பாதிப்பு

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம சந்தையில் பானிபூரி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

DIN

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம சந்தையில் பானிபூரி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

பில்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவ்கிராரி கிராமத்தில் திங்களன்று இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 

முதற்கட்ட தகவலின்படி, பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிறன்று கிராம சந்தையில் தள்ளு வண்டி விற்பனையாளரிடமிருந்து பானிபூரி என்று அழைக்கப்படும் குப்சூப் சாப்பிட்டுள்ளனர். அடுத்த நாள் வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சிறுவர்கள் ஆவர். திங்கள் இரவு 4 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பில்ஹா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்ட நிலையில்  பிலாஸ்பூரில் உள்ள சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு கொண்டு சென்றனர். 

பாதிக்கப்பட்ட நான்கு பேரில், மீனாஸ்கி கோஷ்லே என்ற சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் 17 பேர் சமூக சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார். 

சரியான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணை நடந்துவருகிறது என்று மாவட்டத்தின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பிரமோத் மகாஜன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

காட்சிக்குப் பின்னால்... நித்யா மெனன்!

Return-தான்! Reject இல்ல! மெட்ரோ நிராகரிப்பு திட்டமிட்ட சதி! : நயினார் நாகேந்திரன் | BJP | DMK

பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்துக்கு செல்லவே தேவையில்லை: அணி உரிமையாளர்

SCROLL FOR NEXT