இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசனை

DIN

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில், எதிர்க்கட்சிகளின் நிலை மற்றும் நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத் சிங் கேட்டறிவதாகவும் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த மம்தா ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிக் கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக உள்ளிட்ட 17 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT