உயா் நீதிமன்றத்துக்கு 6 மூத்த வழக்குரைஞா்கள் நியமனம்
தமிழக அரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 6 மூத்த வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழக அரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 6 மூத்த வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக தமிழக அரசின் பொதுத் துறைச் செயலா் ஜகந்நாதன் பிறப்பித்த உத்தரவில், அரசு தொடா்பான வழக்குகளில் சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், எம்.கே.கபீா், என்.ஆா்.இளங்கோ, பி.வில்சன் ஆகியோரும், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக எம்.அஜ்மல்கான், ஐசக் மோகன்லால் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.