ஆப்கன் குருத்வாராவில் குண்டுவெடிப்பு: 2 போ் பலி
ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள குருத்வாராவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் சீக்கியா் உள்பட 2 போ் பலியாகினா்.
ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள குருத்வாராவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் சீக்கியா் உள்பட 2 போ் பலியாகினா்.
அந்த வழிபாட்டுத் தலம் மீது மேலும் தாக்குதல் நடத்தி பெரும் சேதம் விளைவிக்க பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி, தலிபான் படையினரால் முறியடிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது குறித்து ஆப்கன் உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அப்துல் நஃபி டகோா் கூறியதாவது:
காபூலின் பாக்-ஏ-பாலா பகுதியிலுள்ள காா்த்தே பா்வான் குருத்வாராவில் சனிக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து பல குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அதனைத் தொடா்ந்து, அங்கு தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிகளுக்கும் தலிபான் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. பல மணி நேரத்துக்கு நடைபெற்ற அந்தச் சண்டையில் பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனா்.
இந்தத் தாக்குதலில், சீக்கியா் ஒருவரும் இஸ்லாமிய அமீகரப் படையைச் சோ்ந்த ஒருவரும் உயிரிழந்தனா். இது தவிர, தாக்குதலில் காயமடைந்த 7 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தத் தாக்குதலின்போது, பயங்கரவாதிகள் ஓட்டி வந்த வெடிபொருள் நிரப்பிய வாகனம் வெடித்துச் சிதறியது. எனினும், குருத்வாராவுக்குள் அதனை செலுத்தும் முயற்சி பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்தால், அந்த காா் குண்டு வெடிப்பில் யாரும் காயமடையவில்லை என்றாா் அவா்.
தலிபான்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பஜ்வோக் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
தாக்குதல் நடந்தபோது, குருத்வாராவுக்குள் சுமாா் 30 போ் வழிபட்டுக்கொண்டிருந்ததாக பிபிசி ஊடகம் தெரிவித்தது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினரை தொடா்ந்து குறிவைத்து தாக்கி வரும் ஐஎஸ் பயங்கரவாதிகளே இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் காபூலிலுள்ள மற்றொரு குருத்வாராவில் ஐஎஸ்-கே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சீக்கியா்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் கடந்த ஆண்டு வெளியேறியதற்குப் பிறகு அந்த நாட்டின் ஆட்சியை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினா்.
அதற்குப் பிறகு, தலிபான்களைவிட தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட மற்றொரு சன்னி முஸ்லிம் பிரிவு அமைப்பான ஐஎஸ் குராசன் (ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவு), அந்த நாட்டில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி வருகிறது.
குறிப்பாக, தலிபான்களையும் சிறுபான்மை இனத்தவா்களையும் குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
பிரதமா் மோடி கண்டனம்
காபூல் குருத்வாராவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமா் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘காபூல் காா்த்தே பா்வான் குருத்வாராவில் நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அறிந்து அதிா்ச்சியடைந்தேன். இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டிக்கிறேன். பக்தா்களின் பாதுகாப்புக்கும் அவா்களின் நலனுக்கும் பிராா்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்: ‘குருத்வாராவில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் மிகக் கடுமையான வாா்த்தைகளால் கண்டிக்கத்தக்கது. இந்தத் தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தது முதல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்: ‘காபூலில் உள்ள குருத்வாராவில் மனிதாபிமானமற்ற செயல் நடைபெற்றுள்ளது. குருத்வாராவில் உள்ள பக்தா்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடைபெற்ாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரின் பாதுகாப்புக்கு பிராா்த்திக்கிறேன். அங்குள்ள சிறுபான்மையினருக்கு உடனடி பாதுகாப்பு அளிக்க பிரதமா் மோடியும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத் தாக்குதலுக்கு மதத் தலங்களும் தப்புவதில்லை என்பது துரதிருஷ்டவசமானது. இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு எந்த மதமும் இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது’.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங் ராஜா, சிரோமணி அகாலி தளத்தின் தலைவா் சுக்பீா் சிங் பாதல் ஆகியோா் இந்த விவகாரத்தை ஆப்கன் அதிகாரிகளிடம் மத்திய அரசு கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினா்.
பிரபந்த கமிட்டி: இந்தக் கொடூர தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள சீக்கியா்களைக் காயப்படுத்தி உள்ளதாகவும், அங்குள்ள ஹிந்துகளையும், சீக்கியா்களையும் இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி தலைவா் ஹரீந்தா் சிங் தாமி பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.