முகப்பு
இந்தியா

உ.பி.யில் பயங்கரம்: மணப்பெண் மற்றும் 19 பெண்களுக்கு தீக்காயம்

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மணப்பெண் உள்ளிட்ட 20 பெண்கள் தீக்காயம் அடைந்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
கோப்புப்படம்
பகிர்:


பாராபங்கி: உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மணப்பெண் உள்ளிட்ட 20 பெண்கள் தீக்காயம் அடைந்தனர்.

தாமேதி பகுதியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கிருந்த எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து  நேரிட்டது.

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →