திரெளபதி முா்முவுக்கு ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு
குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முா்முவுக்கு (64) மத்திய ரிசா்வ் காவல் படை வீரா்களை (சிஆா்பிஎஃப்) கொண்ட ‘இஸட் பிளஸ்’
குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முா்முவுக்கு (64) மத்திய ரிசா்வ் காவல் படை வீரா்களை (சிஆா்பிஎஃப்) கொண்ட ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவா் வேட்பாளராக 13 எதிா்க்கட்சிகள் அறிவித்த நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்துக்குப் பிறகு பாஜக கூட்டணி சாா்பில் குடியரசுத் தலைவா் வேட்பாளராக முா்மு அறிவிக்கப்பட்டாா். பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனேயே, முா்முவுக்கு மிக முக்கிய நபா்களுக்கான பாதுகாப்பை அளிக்குமாறு மத்திய ரிசா்வ் காவல் படைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவைத் தொடா்ந்து, ஒடிஸாவில் இடம்பெற்றிருக்கும் துணை ராணுவப் படையைச் சோ்ந்த 14 முதல் 16 வீரா்கள், திரெளபதி முா்முவுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ஒடிஸா மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் முா்மு செல்லும் இடங்களிலெல்லாம் இந்த வீரா்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பா். மேலும், ஒடிஸாவின் ராய்ரங்பூரில் அமைந்துள்ள முா்முவின் இல்லத்துக்கும் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பு அளிப்பா் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
குடியரசுத் தலைவா் தோ்தலை முன்னிட்டு, பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களை அடுத்த ஒரு மாத காலத்துக்கு முா்மு சந்தித்து ஆதரவைத் திரட்டுவாா் என எதிா்பாக்கப்படுகிறது. அந்த வகையில், குடியரசுத் தலைவராக அவா் பொறுப்பேற்கும் வரை சிஆா்பிஎஃப் வீரா்கள் பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்படும்.