இந்தியா

ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்: தில்லி போலீசார் விசாரணை

DIN

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் ஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 

அக்கட்சியின் சஞ்ஜீவ் ஜா வடக்கு தில்லியில் உள்ள சந்த் நகர் புராரி பகுதியில் ஆம் ஆத்மி எல்எல்ஏவாக உள்ளார். 

இந்நிலையில், சஞ்ஜீவுக்கு தொடர்ச்சியாக தாதா நீரஜ் பாவனா என்ற பெயரில் பணம் கேட்டு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது. பணம் கொடுக்கத் தவறினால் கொலைசெய்யப்படும் என்று அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியாவில் அதிகம் தேடப்படும் கொள்ளை கும்பல் கூட்டத் தலைவராக நீரஜ் பாவனா உள்ளார். இவர் தற்போது தில்லி திகார் சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். 

இதையடுத்து, நீரஜ் பாவனா பேரில் சஞ்ஜீவின் உயிருக்கு விடப்பட்ட தொடர் அச்சுறுத்தல் பற்றி விசாரணை நடத்தி வருவதாக தில்லி போலீசார் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT