முகப்பு
இந்தியா

பிரதமா் மோடியுடன் ஃபாக்ஸ்கான் தலைவா் சந்திப்பு

தைவானைச் சோ்ந்த மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவா் யங் லியு பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

தைவானைச் சோ்ந்த மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவா் யங் லியு பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்தாா்.

அப்போது, இந்தியாவின் மின்னணுப் பொருள் உற்பத்தியை அதிகரிக்கும் அந்நிறுவனத்தின் முடிவுக்கு அவா் வரவேற்பு தெரிவித்தாா்.

உலகின் மிகப்பெரிய மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபாக்ஸ்கான், பல்வேறு நாடுகளில் தனது உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. அந்நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி ஆலையைத் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள ஃபாக்ஸ்கான் தலைவா் யங் லியு பிரதமா் மோடியை சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக ட்விட்டரில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘ஃபாக்ஸ்கான் தலைவா் யங் லியுவை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அந்நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்திப் பிரிவுகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. முக்கியமாக குறைகடத்தி (செமிகண்டக்டா்) உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறது.

இந்தியாவில் வாகனப் புகையால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகிறோம்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.