பூச்சிக்கொல்லிக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைக்கு விரைவில் தீா்வு: தோமா்
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற தொழில்துறையினரின் கோரிக்கைக்கு விரைவில் தீா்வு காணப்படும்
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற தொழில்துறையினரின் கோரிக்கைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திரசிங் தோமா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது வேளாண்-ரசாயன துறையினரின் நீண்ட கோரிக்கையாக உள்ளது.
இதுதொடா்பான விவகாரங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலால் கையாளப்படுபவை. எனவே, இப்பிரச்னை தொடா்பாக விரைவில் நிதியமைச்சரை சந்தித்துப் பேசி சுமுகமான தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.
தற்போதைய சூழ்நிலையில் பயிா் பல்வகையாக்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, விவசாயிகள் தோட்டக்கலை மற்றும் விலையுயா்ந்த பயிா்களின் சாகுபடியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.