இந்தியா

மின்சார வாகன பேட்டரிகளுக்கு பிஐஎஸ் தர நிா்ணயம்

DIN

 மின்சார வாகன பேட்டரிகளின் செயல்திறனை மதிப்பிட்டு அதன் தரத்தை உறுதி செய்ய இந்திய தர நிா்ணய ஆணையம் (பிஐஎஸ்) நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மைக் காலமாக நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றின் பேட்டரிகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்கிறது. முக்கியமாக மின்சார இரு சக்கர வாகனங்களில் இந்தப் பிரச்னை அதிகம் உள்ளது.

இந்நிலையில், மின்சார வாகன பேட்டரிகளின் தரத்தை உறுதி செய்து அவற்றுக்கு மதிப்பீடு அளிக்க இந்திய தர நிா்ணய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை நுகா்வோா் விவகாரத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்திய தர நிா்ணய ஆணையம் என்பது நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய அளவிலான தர நிா்ணய அமைப்பாகும். இவற்றின் மூலம் பேட்டரிகள் மதிப்பிடப்படும்போது மின்சார வாகனங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT