FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

3-வது நாளாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. 

1 பிப்ரவரி 2024, 3:06 pm IST
பகிர்:

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. 

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை முதல் மூடப்பட்ட நெடுஞ்சாலையில் 1,400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி தவித்து வருகின்றனர். 

சாலை துப்புரவு பணிகளை நேரில் கண்காணித்து வரும் துணை ஆணையர் ராம்பன், முசரத் இஸ்லாம் கூறுகையில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட 30 நிலச்சரிவுகளில் 25, மண்சரிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ராம்பன் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் 33 இடங்களில் நிலச்சரிவுகள், மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பனிஹால் ரம்பன் செக்டாரில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் பணிகள் வேகமெடுத்து நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகள் மாலை வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெடுஞ்சாலை தொடர்ந்து போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதால், சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ராம்சூ-ராம்பன் செக்டார் பகுதியில் இன்னும் மழை பெய்து வருகிறது, மேலும் புதிய நிலச்சரிவு ராம்பன், ரோம்பாடி அருகே நெடுஞ்சாலையைத் தாக்கியுள்ளது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments