இந்தியா

மனைவியைக் கடித்த பாம்பை மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற கணவர்: ஏன்?

மனைவியைக் கடித்த பாம்பையும் உடன் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற வினோத சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. 

DIN

உன்னாவ்: மனைவியைக் கடித்த பாம்பையும் உடன் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற வினோத சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. 

மக்கி காவல் வட்டத்திற்குட்பட்ட அப்சல் நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உ.பி.யில் உள்ள அப்சல் நகர் பகுதியில் ஒரு வீட்டில் தன் மனைவியை பாம்பு ஒன்று தீண்டியுள்ளது. இதையடுத்து, அவரது கணவர் மனைவியுடன், கடித்த பாம்பையும் ஒரு பாட்டிலில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். 

அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, முதல்கட்ட மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து மருத்துவர்கள் கணவர் ராமேந்திர யாதவிடம், ஏன் பாம்பை உடன் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் என் மனைவியை எந்த பாம்பு கடித்தது என்று நீங்கள் கேட்டால்? அதற்காகத்தான் பாம்பை உடன் கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார். 

பின்னர், தனது மனைவி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு பாம்பைக் காட்டில் விடுவித்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

பாம்பு சுவாசிப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டிலில் துளைகளை துளைத்ததாகவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT