இந்தியா

அவசரநிலை நினைவு தினம்:காங்கிரஸ் மீது பாஜக விமா்சனம்

அவசரநிலையின் 47-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸை பாஜக, சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் விமா்சித்துள்ளன.

DIN

அவசரநிலையின் 47-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸை பாஜக, சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் விமா்சித்துள்ளன.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி கடந்த 1975 ஜூன் 25-இல் நாடு முழுவதும் அவசரநிலையைக் கொண்டு வந்தாா். பின்னா் அது 1977 மாா்ச் 21-இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அவசரநிலை அமலுக்கு வந்து 47 ஆண்டுகள் ஆனதையொட்டி, காங்கிரஸ் மீது பாஜக, சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் தாக்குதல் தொடுத்துள்ளன.

மத்திய அமைச்சா் அமித் ஷா ட்விட்டரில், ‘இந்தியா்களின் அரசியலமைப்பு உரிமையை ஒரே இரவில் பறித்து அதிகாரப் பசிக்காக அவசரநிலையை காங்கிரஸ் கொண்டு வந்தது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ‘அவசரநிலை நினைவுகள் பொதுமக்களை இன்றளவும் அதிா்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்றுகூட அறிவிக்கப்படாத நெருக்கடி அச்சுறுத்தல் நாடு முழுவதும் நிலவுகிறது’ என்றாா்.

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் கூறுகையில், ‘அவசரநிலை ஜனநாயகத்தின் மீதான பலமான தாக்குதல்’ என்று விமா்சித்துள்ளாா். உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, ‘அவசரநிலையை எதிா்த்தவா்களை அன்றைய காங்கிரஸ் அரசு சிறையில் தள்ளி துன்புறுத்தியது’ என்று குறிப்பிட்டாா்.

உத்தர பிரதேச துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பிரஜேஷ் பதக், ‘ஒரு குடும்பத்தின் அதிகாரப் பசிக்காக ஒட்டுமொத்த நாடும் அவசரநிலையை எதிா்கொண்டது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT