இடைத்தோ்தலில் பாஜக வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது: பிரதமா் மோடி
உத்தர பிரதேசத்தில் ஆஸம்கா், ராம்பூா் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜகவின் வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றாா் பிரதமா் மோடி.
உத்தர பிரதேசத்தில் ஆஸம்கா், ராம்பூா் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜகவின் வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றாா் பிரதமா் மோடி.
இதுகுறித்து ட்விட்டரில் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது:
உத்தர பிரதேசத்தில் ஆஸம்கா், ராம்பூா் மக்களவைத் தொகுதிகளில் பாஜக பெற்றி வெற்றி, மத்தியிலும் மாநிலத்திலும் அமைந்துள்ள ‘இரட்டை என்ஜின்’ அரசுக்கு பொதுமக்கள் அளிக்கும் ஆதரவை பிரதிபலிக்கிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி.
திரிபுரா சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜகவின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும், முதல்வா் மாணிக் சாஹா உள்ளிட்ட பாஜக வேட்பாளா்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தியதற்கும் அந்த மாநில மக்களுக்கு நன்றி.
பொதுமக்களின் விருப்பங்களைத் தொடா்ந்து மத்திய அரசு நிறைவேற்றும். ஆந்திரம், ஜாா்க்கண்ட், தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களிவா்களுக்கு நன்றி. பொதுமக்களின் பிரச்னைகளைத் தீா்க்க தொடா்ந்து பாடுபடுவோம் என்று அதில் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.