இந்தியா

‘இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம்’: ராகுல் காந்தி

குடியரசுத் தலைவர் தேர்தலில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் நடைபெறுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

DIN


புது தில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் நடைபெறுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹவை நிறுத்தியுள்ளனர்.

புது தில்லியில் இன்று தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், யஷ்வந்த் சின்ஹா இன்று காலை தனது வேட்புமனுவை அளித்தார்.

வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனர்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து யஷ்வந்த் சின்ஹவை ஆதரித்துள்ளனர். தனி நபரை ஆதரிக்கிறோம் என்றாலும், இது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம். ஆர்.எஸ்.எஸின் கோபம் மற்றும் வெறுப்பு சித்தாந்தத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் இரக்க சித்தாந்தம் ஒன்றாக நிற்கிறது.”

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அறிவிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா கூட்டணி எம்பிக்கள் கார்கே, ராகுல் தலைமையில் ஆலோசனை!

சென்னை, புறநகரில் 2 நாள்களுக்கு மழை! புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்!

அவைக்குள்ளே அமளி வேண்டாம்! எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பிரமுகர் சாலை விபத்தில் பலி

குளிர்கால கூட்டத்தொடர்! மரபுகளைக் காக்கும் வகையில் செயல்பட ஓம் பிர்லா அறிவுரை!

SCROLL FOR NEXT