மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் நாட்டில் அது நடக்காமல் தவிர்க்கலாம் 
இந்தியா

மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் நாட்டில் அது நடக்காமல் தவிர்க்கலாம்

இந்தியாவில் புதிதாக 11,793 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவில் புதிதாக 11,793 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1 லட்சத்தை நோக்கிச் செல்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் அந்த நிலையை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிதாக 11,793 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 10,917 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,27,97,092 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக 11 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 96,700 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் இது  சதவிகிதம். தேசிய அளவில் குணமடைவோர் விகிதம் 98.57 ஆக உள்ளது. . 

அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டில் இதுவரை மொத்தம் 197.31 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT