இந்தியா

அமர்நாத் பயணிகளுக்கு உண்மையான பாதுகாப்பு காஷ்மீர் மக்கள்தான்: மெஹபூபா முஃப்தி 

DIN

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தாலும், அமர்நாத் யாத்ரீகர்ளுக்கு உண்மையான பாதுகாப்பு உணர்வை வழங்குவது காஷ்மீர் மக்கள் தான் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்தார். 

கரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருடாந்திர அமர்நாத் யாத்திரை நாளை தொடங்குகிறது. 

காஷ்மீரிகள் எப்போதும் போல் அமர்நாத் பயணிகளை முழு மனதுடன் வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். 

யாத்திரை செல்லும் வழியில் கடைகளை மூடுவது உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பயணிகளுக்கு உண்மையான பாதுகாப்பு உணர்வை வழங்குவது காஷ்மீரிகளாகிய நாங்கள்தான் என்று மெஹபூபா தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும் அமர்நாத் யாத்திரை வரை வணிகங்களை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறி நகரின் பாந்தசௌக் பகுதியைச் சேர்ந்த கடைக்காரர்கள் குழு போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT