இந்தியா

தையல்காரர் படுகொலை: உதய்பூரில் கண்டனப் பேரணி

தையல்காரர் கன்னையா லாலின் கொடூரமான கொலைக்கு எதிராக உதய்பூரில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 

DIN

தையல்காரர் கன்னையா லாலின் கொடூரமான கொலைக்கு எதிராக உதய்பூரில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

ராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரர் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில் விடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. படுகொலையில் தொடர்புடைய கௌஸ் மொஹம்மது மற்றும் ரியாஸ் ஜப்பர் ஆகிய இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்து அமைப்புகள் சார்பில் சர்வ ஹிந்து சமாஜ் பேரணி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் டவுன்ஹால் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை அமைதியாக நடைபெற்றது. 

பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஊர்வலம் செல்லும் வழியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாகவும் கூடுதல் துணை ஆணையர் எம்.என்.தினேஷ் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT