முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 7,554 பேருக்குத் தொற்று: ஒரே நாளில் 14,123 பேர் மீண்டனர்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,554 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 14,123 பேர் மீண்டனர். 

இந்தியா

நாட்டில் புதிதாக 7,554 பேருக்குத் தொற்று: ஒரே நாளில் 14,123 பேர் மீண்டனர்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,554 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 14,123 பேர் மீண்டனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,554 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 14,123 பேர் மீண்டனர். 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 7,554 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 223 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,14,246-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது. 

நேற்று ஒரேநாளில் 14,123 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் விகிதம் 98.60 சதவிகிதமாக உள்ளது. தற்போது 85,680 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாடு முழுவதும் இதுவரை 1,77,79,92,977 (177 கோடி) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,55,862 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.20 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.20 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 76,91,67,052 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,84,059 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →