மணிப்பூர் 2-ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 76.62% வாக்குப் பதிவு
மணிப்பூர் இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 76.62 சதவிகித வாக்குகள் பதிவானதாக மணிப்பூர் தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 76.62 சதவிகித வாக்குகள் பதிவானதாக மணிப்பூர் தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இதையும் படிக்க | 7 மாவட்டங்களில் பாஜக பிரிவுகள், அணிகள் கலைப்பு
வாக்குப் பதிவு குறித்து அந்த மணிப்பூர் தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது:
"மணிப்பூர் இரண்டாம் கட்ட (இறுதிக் கட்ட) வாக்குப் பதிவு பெரிதளவில் அமைதியாக நடைபெற்றது. மாலை 5 மணி வரை 76.62% வாக்குகள் பதிவாகியுள்ளன. 85% வாக்குகள் பதிவாகியிருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
பெரிதளவில் தேர்தல் வன்முறை எதுவும் நிகழவில்லை. மலைகளில் 12 வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரங்களில் தரவுகள் சேகரிக்கப்படாமல் இருந்தால் மறுவாக்குப் பதிவு நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அரசியல் கட்சிகளிடமிருந்தும் புகார்கள் வந்துள்ளன. அவை குறித்தும் ஆய்வு நடத்தப்படும்."