இந்தியா

மகளிர் தினத்தன்று ம.பி.யில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த பெண் காவலர்கள்

மத்தியப் பிரதேசம் முழுவதும் போக்குவரத்து நிர்வாகத்தை ஆண் காவலர்களுடன் இணைந்து பெண் காவலர்கள் போக்குவரத்தைக் கையாளுவார்கள் என்று மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா திங்கள்கிழமை தெரிவித்தார்

DIN

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்தியப் பிரதேசம் முழுவதும் போக்குவரத்து நிர்வாகத்தை ஆண் காவலர்களுடன் இணைந்து பெண் காவலர்கள் போக்குவரத்தைக் கையாளுவார்கள் என்று மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா திங்கள்கிழமை தெரிவித்தார். 

பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை அதிகரிப்பதுடன், ஆண்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்ற முடியும் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

நாளை மகளிர் தினம். மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையில் பணியாற்றும் எங்கள் மகள்கள் ஆண்களுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து நிர்வாகத்தைக் கையாளுவார்கள். 
மாநிலத்தில் நாளை முதல் புதிய தொடக்கம் என்றார் அமைச்சர். 

பெண்கள் தொடர்பான பிரச்னைகளை முன்னிலைப்படுத்த, குறிப்பாக பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு!! வெள்ளி எவ்வளவு?

தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நிற்கிறேன்! வேலைநிறுத்தத்துக்கு ராகுல் ஆதரவு!

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்! தமிழகத்தில் பாதிப்பா?

கராச்சி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, 5 பேர் காயம்

ஊடகங்களின் முன்னோடி !

SCROLL FOR NEXT