இந்தியா

தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்: ராகுல் காந்தி உறுதி

DIN

கடந்த சில ஆண்டுகளாகவே, சட்டப்பேரவை, மக்களவை என பெரும்பான்மையான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து வருகிறது.

இதனிடையே, பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இரட்டை இலக்கு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன். வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். 

அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT