ராகுல் காந்தி 
இந்தியா

தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்: ராகுல் காந்தி உறுதி

பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது.

DIN

கடந்த சில ஆண்டுகளாகவே, சட்டப்பேரவை, மக்களவை என பெரும்பான்மையான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து வருகிறது.

இதனிடையே, பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இரட்டை இலக்கு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன். வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். 

அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதிலிருந்து பாடம் கற்று மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு!! வெள்ளி எவ்வளவு?

தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நிற்கிறேன்! வேலைநிறுத்தத்துக்கு ராகுல் ஆதரவு!

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்! தமிழகத்தில் பாதிப்பா?

கராச்சி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, 5 பேர் காயம்

ஊடகங்களின் முன்னோடி !

SCROLL FOR NEXT