முகப்பு
இந்தியா

பஞ்சாபை இழந்தது; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை?

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பஞ்சாபை இழந்தது; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை?
பகிர்:

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆம் ஆத்மி அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்க 59 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 90 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

90 இடங்களில் முன்னிலை வகிப்பதன் மூலம், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், அகாலிதளம் -6, பாஜக - 2, இதர - 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 

மொத்தமுள்ள 31 மாநிலங்களில் 6 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. ஆனால், இந்த ஆறு மாநிலங்களில் வெறும் மூன்று மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்  முதல்வராக இருந்து வருகிறார். அதாவது, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் தலைவர் முதல்வராக உள்ளார்.  தற்போது இந்த மூன்று மாநிலங்களில் பஞ்சாப் மாநிலத்தை காங்கிரஸ் இழந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சியின் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.

காங்கிரஸ் ஆளும் மாநிலமாக இருந்த பஞ்சாப் தற்போது ஆம் ஆத்மி வசம் சென்றுவிடும் என்பதால், நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளது.

தற்போது, நாட்டிலேயே ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

பஞ்சாபில் ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தலில் 71.95 சதவீத வாக்குகள் பதிவாகின.  குறிப்பிட்ட இடைவெளியில் தோ்தல் முடிவுகளை வலைதளத்தில் தெரிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் செய்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →