முகப்பு
இந்தியா

அகமதாபாத்தில் 92வது தண்டி சைக்கிள் யாத்திரையைத் தொடங்கிவைத்தார் அமித்ஷா

அகமதாபாத்தில் தண்டி யாத்திரையின் 92வது ஆண்டு விழாவை மத்திய உள்துறை அமைச்சர் அமிர்ஷா கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். 

Updated On : 12 மார்ச், 2022 at 12:52 PM
பகிர்:

அகமதாபாத்தில் தண்டி யாத்திரையின் 92வது ஆண்டு விழாவை மத்திய உள்துறை அமைச்சர் அமிர்ஷா கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். 

கடந்த 1930 மார்ச் 12-ஆம் தேதி ஆங்கிலேயர்கள் விதித்த உப்பு வரியை எதிர்த்து மகாத்மா காந்தி தலைமையில் தண்டி யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து மாநிலத்தின் கடலோரப் பகுதியில் உள்ள தண்டி கிராமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தண்டி யாத்திரை நடத்தப்படுகிறது. அந்தவகையில், அகமதாபாத்தில் தண்டி சைக்கிள் யாத்திரையை இன்று அமித்ஷா தொடங்கிவைத்தார். குஜராத் வித்யா பீடத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தண்டி சைக்கிள் யாத்திரை அகமதாபாத்தில் உள்ள கோச்சரப் ஆசிரமத்திலிருந்து தண்டிக்குப் புறப்பட்டது. 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.