பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி
பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பாட்னா: பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தேவேந்திர யாதவ், ரமேஷ் மஹ்தோ, ஜே.கே. யாதவ் 3 பேரும் ஒரே இடத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை வாங்கி வெள்ளிக்கிழமை மாலை உட்கொண்டனர். இரவில் அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர்கள் குடும்பத்தினர் கோபால்கஞ்சில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை இறந்தனர்.
ரிங்கு யாதவ் மற்றும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மார்ச் 9 அன்று கள்ளச்சாராயம் அருந்தியதால், சிவானில் 3 பேரும், மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் 2 பேரும் இறந்தனர்.