இந்தியா

கொல்கத்தாவில் தீ விபத்து: 16 மணிநேரமாகப் போராடும் தீயணைப்புத் துறை

DIN


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர 16 மணிநேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலுள்ள தங்கரா பகுதியில் உள்ள கிடங்கில் தோல் பதனிரும் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று (மார்ச் 12) மாலை 6.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 16 மணிநேரமாக தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் அடுத்தடுத்த பகுதிகளுக்கு தீ எளிதில் பரவுகிறது.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் 15 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. எனினும் கிடங்கில் எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனம் அதிக அளவில் இருப்பதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மண்டல தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

SCROLL FOR NEXT