கொல்கத்தா கிடங்கில் தீ விபத்து: 16 மணிநேரமாக போராடும் தீயணைப்புத் துறை 
இந்தியா

கொல்கத்தாவில் தீ விபத்து: 16 மணிநேரமாகப் போராடும் தீயணைப்புத் துறை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர 16 மணிநேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

DIN


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர 16 மணிநேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலுள்ள தங்கரா பகுதியில் உள்ள கிடங்கில் தோல் பதனிரும் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று (மார்ச் 12) மாலை 6.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 16 மணிநேரமாக தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் அடுத்தடுத்த பகுதிகளுக்கு தீ எளிதில் பரவுகிறது.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் 15 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. எனினும் கிடங்கில் எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனம் அதிக அளவில் இருப்பதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மண்டல தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT