கொல்கத்தா கிடங்கில் தீ விபத்து: 16 மணிநேரமாக போராடும் தீயணைப்புத் துறை 
இந்தியா

கொல்கத்தாவில் தீ விபத்து: 16 மணிநேரமாகப் போராடும் தீயணைப்புத் துறை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர 16 மணிநேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

DIN


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர 16 மணிநேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலுள்ள தங்கரா பகுதியில் உள்ள கிடங்கில் தோல் பதனிரும் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு நேற்று (மார்ச் 12) மாலை 6.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 16 மணிநேரமாக தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் அடுத்தடுத்த பகுதிகளுக்கு தீ எளிதில் பரவுகிறது.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் 15 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. எனினும் கிடங்கில் எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனம் அதிக அளவில் இருப்பதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மண்டல தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT