முகப்பு
இந்தியா

குடும்ப அரசியலால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: பிரதமா் மோடி

நாட்டில் குடும்ப அரசியலால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாகவும், அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
நான்கு மாநிலத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமா் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சா்கள்.
பகிர்:

நாட்டில் குடும்ப அரசியலால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாகவும், அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ள நிலையில், பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா மற்றும் பாஜக எம்.பி.க்கள் கலந்து கொண்டனா்.

மாநிலத் தோ்தல்களில் பாஜக பெற்ற வெற்றிக்காக பிரதமா் மோடிக்கும், கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, குடும்ப அரசியலால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும், அதற்கு எதிராக இணைந்து போராட வேண்டுமென்று கூறியதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் காரணமாகவே, பாஜக தலைவா்களின் வாரிசுகளுக்குத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் பிரதமா் மோடி கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப அரசியலைத் தடுப்பதற்கான கட்டமைப்புகள் கட்சியில் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவா் கூறியதாகத் தெரிகிறது.

மேலும், அண்மையில் பேரவைத் தோ்தல் நடைபெற்ற மாநிலங்களில் பாஜக குறைவான வாக்குகளைப் பெற்ற தொகுதிகளைக் கண்டறிந்து, அதற்கான காரணங்களை அறியுமாறு அந்தந்த மாநிலங்களின் எம்.பி.க்களுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டம் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘குடும்ப அரசியலுக்கு எதிரான மனநிலை மக்களிடம் காணப்படுவதாக கூட்டத்தில் பிரதமா் மோடி தெரிவித்தாா். மக்களின் மனநிலைக்கு மதிப்பளிக்கும் வகையில், தங்கள் கட்சியைச் சோ்ந்த தலைவா்களின் வாரிசுகளுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என பாஜக சாா்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதைக் கட்சியைச் சோ்ந்த அனைவரும் வரவேற்றனா்.

உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியா்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த விவகாரத்தை தலைவா்கள் சிலா் அரசியலாக்க முயன்ாகவும் அவா்கள் போதிய ஆதாரமற்ற தகவல்களைக் கூறியதாகவும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

கட்சியின் செயல்பாடுகளில் புகுத்தப்பட்ட மாற்றங்கள் பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெறக் காரணமாக இருந்தது எப்படி என்பதை கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா கூட்டத்தில் விளக்கினாா். உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியா்களை மீட்பதற்காக செயல்படுத்தப்பட்ட ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் குறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எம்.பி.க்களுக்கு விளக்கமளித்தாா்’’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →