கர்நாடக முதல்வர் 
இந்தியா

ஹிஜாப் தீர்ப்பு : நீதிபதிகள் 3 பேருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

DIN

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

ஹிஜாப் தொடா்பான வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம் கடந்த 15-ஆம் தேதி தீா்ப்பு வழங்கியது. வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும்; ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத வழக்கப்படி கட்டாயம் அல்ல; பள்ளிகள், கல்லூரிகளில் சீருடையே அணிய வேண்டும் என்று 129 பக்கங்களில்
தீா்ப்பு வழங்கியது.

இந்தத் தீா்ப்பால் அதிருப்தி அடைந்த இஸ்லாமிய மாணவிகள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளனா். மேலும் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை எதிா்த்து வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டத்தில் இஸ்லாமியா்கள் ஈடுபட்டனா்.

இந்தநிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று கூறியதாவது, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகளுக்கு இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன். கொலை மிரட்டலைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கக்பபட்டுள்ளது. அனைவரும் நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துவோர் கவனத்துக்கு! போபாலில் 60 லட்சம் மோசடி!

கிட்னிகள் ஜாக்கிரதை! பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்!

நாட்டரசன்கோட்டையில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு தீவிரம்!

டிரம்பை பார்த்து பயப்படுகிறார் மோடி! ராகுல் காந்தி

ஹரியாணா ஐஜி பூரண் குமாரின் மனைவி, அவரது சகோதரர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT