காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 
இந்தியா

உக்ரைன் போரால் விலை உயர்வா? மல்லிகார்ஜுன கார்கே விளக்கம்

ரஷியாவிடமிருந்து ஒரு சதவிகிதம் கச்சா எண்ணெய்கூட இந்தியா வாங்கவில்லை என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

DIN

ரஷியாவிடமிருந்து ஒரு சதவிகிதம் கச்சா எண்ணெய்கூட இந்தியா வாங்கவில்லை என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவையின் விலை உயர்வை கண்டித்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

“பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மக்களிடமிருந்து ரூ. 10,000 கோடியை மோடியின் அரசு கொள்ளை அடிக்கின்றது. பலர், உக்ரைன் - ரஷியா இடையே நடைபெறும் போரால்தான் விலை உயர்கிறது என கருதுகின்றனர். ஆனால், ரஷியாவிடமிருந்து ஒரு சதவிகிதம்கூட கச்சா எண்ணெய் வாங்கவில்லை என பெட்ரோலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்” என்றார்.

தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி பேசியதாவது:

“சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு எரிபொருளின் விலை உயரும் என்று கூறினோம். அதேபோல் நடந்துள்ளது. ஏழைகளிடமிருந்து கொள்ளை அடிப்பதில் மோடி அரசு சிறிதும் தயங்குவதில்லை. மக்களவைக்கு வெளியேவும், உள்ளேயும் மக்களுக்காக விலை உயர்வை எதிர்ப்போம்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

மாநகரம் - கூலி உறங்கா இரவுகள்... கலை இயக்குநர் பற்றி லோகேஷ் பெருமிதம்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

“வீட்டுக்கு போய் நா கால்ல விழணும்” அஜித் குமார் - ஷாலினி தம்பதியின் Cute விடியோ

“கண்மூடித்தனமாக எதையும் எதிர்க்கவில்லை”அமைச்சர் Anbil Mahesh பேட்டி

SCROLL FOR NEXT