தில்லியில் எம்எல்ஏ பதவி ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளிக்கிறார் ராகவ் சத்தா 
இந்தியா

பஞ்சாப்: ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 5 பேரும் மாநிலங்களவைக்குத் தேர்வு

​பஞ்சாபில் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட 5 பேரும் போட்டியின்றித் தேர்வானதாக தேர்தல் அலுவலரும், பேரவைச் செயலருமான சுரீந்தர் பால் அறிவித்துள்ளார்.

DIN


பஞ்சாபில் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட 5 பேரும் போட்டியின்றித் தேர்வானதாக தேர்தல் அலுவலரும், பேரவைச் செயலருமான சுரீந்தர் பால் அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் காலியான 5 மாநிலங்களவை இடங்களுக்கு ஆம் ஆத்மி போட்டியிட்டது. ஆம் ஆத்மி வேட்பாளர்களாக ஹர்பஜன் சிங், அசோக் மிட்டல், ராகவ் சத்தா, சந்தீப் பாதக், சஞ்சீவ் அரோரா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சண்டீகரில் உள்ள பஞ்சாப் சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான இறுதி நாளில் எந்தவொரு வேட்பாளரும் வேட்புமனுவைத் திரும்பப் பெறவில்லை. இந்த நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 5 பேரும் போட்டியின்றித் தேர்வானதாக தேர்தல் அலுவலரும், பேரவைச் செயலருமான சுரீந்தர் பால் அறிவித்துள்ளார்.

இதன்மூலம், மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் 8 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாபிலிருந்து தேர்வாகியுள்ள ஆம் ஆத்மி வேட்பாளர்கள் யார்?

  • ஹர்பஜன் சிங் - முன்னாள் கிரிக்கெட் வீரர்
  • அசோக் மிட்டல் - லவ்லி ஃபுரோஃபஷனல் பல்கலைக்கழக நிறுவனர்
  • ராகவ் சத்தா - ஆம் ஆத்மி எம்எல்ஏ
  • சந்தீப் பாதக் - இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன (ஐஐடி) பேராசிரியர்
  • சஞீச்வ் அரோரா - தொழிலதிபர்  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வருக்கு அமைச்சா் காந்தி தலைமையில் வரவேற்பு

9 நாள்களுக்குப் பிறகு டன் கணக்கில் சிக்கிய மீன்கள்

பெளா்ணமி விளக்கு பூஜை

கோவில்பட்டியில் தென் மண்டல குழந்தைகள் அறிவியல் மாநாடு

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா

SCROLL FOR NEXT