இந்தியா

கே-ரயில் திட்டம்: பிரதமருடன் பினராயி விஜயன் சந்திப்பு

DIN

கே-ரயில் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

கேரள அரசு கே-ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அதிவேக ரயில் மூலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 529.45 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணிநேரத்தில் பயணிக்கலாம்.

இந்த திட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவையிலும் கேரள காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்த கேரள முதல்வர், கே-ரயில் திட்டம் உள்ளிட்ட மாநிலப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, உக்ரைனில் உள்ள கேரள மாணவர்களை பாதுகாப்பாக மீட்கக்கோரி முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT