முகப்பு
இந்தியா

ஒடிசாவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடக்கம்: வாக்களித்தார் நவீன் பட்நாயக்

ஒடிசா மாநில நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

Updated On : 24 மார்ச், 2022 at 11:26 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:16 PM

ஒடிசா மாநில நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், கட்டாக் மற்றும் ர்ஹாம்பூர் மாநகராட்சிகள் உள்பட 109 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி நடைபெற உள்ளது. 

மொத்தம் 3,068 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்று மாநகராட்சிகளில் 168 வார்டுகளுக்கு 1,407 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியின் வார்டு எண் 53ல் உள்ள ஏரோட்ரோம் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் நவீன் பட்நாயக் இன்று காலை வாக்களித்தார்.

மொத்தமாக 55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிகர் 6,411 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதற்காக 22 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 26ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.