இந்தியா

மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக்கின் உடல்நிலை ‘கவலைக்கிடம்’

DIN

பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக்கின் உடல்நிலை ‘கவலைக்கிடமாக’ இருப்பதாகவும், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்குரைஞா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அவரது கூட்டாளிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் நவாப் மாலிக் (62) கடந்த பிப்ரவரி 23-இல் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா். பின்னா், மும்பை ஆா்தா் சாலை சிறையில் நீதிமன்றக் காவலில் அவா் வைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், தனது உடல்நலக் குறைபாடு கருதி தனக்கு 6 வாரம் ஜாமீன் அளிக்குமாறு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நவாப் மாலிக் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆா்.என்.ரோக்கடே முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நவாப் மாலிக் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறியது:

அமைச்சா் நவாப் மாலிக்குக்கு வீட்டில் சமைத்த உணவை அவரது குடும்ப உறுப்பினா்கள் கொண்டு சென்றபோது அவா் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அவா் கடந்த 3 நாள்களாக காய்ச்சல், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

ஜேஜே மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், நவாப் மாலிக்கை தனியாா் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து அமைச்சரின் உடல்நிலை குறித்தும் அவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறித்தும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கத் தவறியதற்காக சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தாா். பின்னா், அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிா்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை மே 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அமைச்சா் நவாப் மாலிக் மீதான இந்த பணமோசடி வழக்கில் அண்மையில் 5,000 பக்க குற்றபத்திரிகையை அமலாக்கத் துறையினா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT